Feb 27, 2010

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா???????

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.

  • காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை முடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.
  • நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
  • முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
  • பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.
  • கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.
  • உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.
  • இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...

பெரும்பாலும் உபயோகமற்று, நம் வீட்டு பரணிலேயே கிடக்கும் பல அடுக்குகள் கொண்ட டிபன் கேரியரை தினமும் உபயோகிக்க சில யோசனைகள்...
  • தினமும் சாப்பிட்டு முடித்ததும் மீதமுள்ள சாம்பார், பொரியல், கூட்டு போன்றவற்றை இந்த அடுக்குகளில் எடுத்து வைத்து விட்டால், டைனிங் டேபிள் சுத்தமாக இருக்கும்.
  • மாதாந்திர மளிகை சாமான்கள் வாங்கும் போது அவற்றை டப்பாக்களில் நிறைத்தது போக மீதி இருப்பவற்றை இந்த கேரியர் அடுக்குகளில் போட்டு வைத்து விட்டால், அவை பாதுகாப்பாக இருப்பதுடன் தேட வேண்டிய அவசியமும் இருக்காது.
  • பண்டிகை தினங்களில் நாம் செய்யும் பலகாரங்கறை இவற்றில் போட்டு ஒன்றன் மேல் ஒன்றாக குறைந்த இடத்தில் அடுக்கி வைத்து விடலாம்.
  • மீதமாகும் உணவுப் பொருட்களை கேரியர் பாத்திரங்களில் நிரப்பி பிரிட்ஜில் வைத்தால் இடம் நிறைய கிடைக்கும். பொருட்களும் கீழே கொட்டி வீணாகாது.


3 வழிகளில் சிகப்பழகு

வெயில் படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும் மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன.

தலையை கவனிப்பது முதல் வழி

தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பது போல பார்த்துக் கொள்வதும் அவசியம். இந்த இரண்டையும் ஈடு செய்ய ஒரு சீயக்காய் பவுடர் இருக்கிறது.
  1. சீயக்காய் - கால் கிலோ
  2. பயறு - கால் கிலோ
  3. வெந்தயம் - கால் கிலோ
  4. புங்கங்கொட்டை - 100 கிராம்
  5. பூலான் கிழங்கு - 100 கிராம்
இவற்றை நன்றாக மிஷினில் அரைத்துக் வைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் 2 முறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து இந்த பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய் பசை ஒரேடியாக போகாமல் கருமையும் மறைய தொடங்கும்.

அடுத்ததாக கவனிக்க வேண்டியது சருமம்

வெயியில் போவதற்கு முன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு துடைத்துவிட்டு டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.

வெளியில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால், நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக இதோ இந்த குளியல் பவுடரை பயன்படுத்தினால் சருமம் மிளிரும்.
  1. பயத்தம் பருப்பு - 100 கிராம்
  2. கட்லை பருப்பு - 100 கிராம்
  3. பூலான் கிழங்கு - 50 கிராம்
  4. கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
  5. வெள்ளரி விதை - 100 கிராம்
  6. வெட்டிவேர் - 25 கிராம்
இவற்றை மிஷினில் அரைத்து தினமும் பூசி குளியுங்கள்.

வாரத்தில் 2 நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன் சேர்த்து குளித்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

முகத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் கருமையை போக்க ஒரு இயற்கை ப்ளீச் சிகிச்சை இருக்கிறது.

தோல் சீவிய உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி, வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதை மஞ்சள் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசுங்கள். இது முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகளை களைந்தெடுத்து முகத்தை பளிங்குபோல மாற்றிவிடும்.

உடம்பில் சூடு அதிகமாகும்போது தோலின் கருமை அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சை காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.


Feb 12, 2010

பல நோய்கள் தீர காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும் - நன்றி குமுதம் சிநேகிதி


தண்ணீர் சிகிச்சை தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்னால் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிக்கவும், அதன் பிறகு பல் துலக்க வேண்டும். ஆனால் அடுத்த 45 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. 45 நிமிடங்கள் கழிந்த பிறகு வழக்கம் போல சாப்பிடலாம், தண்ணீர் பருகலாம்.
மிக மிக முக்கியமான விஷயம்

இந்த தண்ணீர் சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இந்த 3 க்கும் பிறகு அடுத்த 2 மணி நேரம் எதையும் சாப்பிடவோ, பருகவோ கூடாது. இந்த சிகிச்சையில் எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது, குறிப்பிட்ட நாளைக்கு என்றில்லாமல் தினமும் இந்த பழக்கத்தை தொடர்ந்தால் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.

தலைவலி, உடம்புவலி, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், ஆர்த்ரைடிஸ், காசநோய், உடலில் அதிகபடியான கொழுப்பு சேர்வது, வயிற்றுபோக்கு, கிட்னி மற்றும் யுரினரி பிரச்சனைகள், பைல்ஸ், சர்க்கரை வியாதி, மாதவிடாய் பிரச்சனைகள், கண் நோய்கள், காது, முக்கு, தொண்டை பிரச்சனைகள் இப்படி பல நோய்கள் தீர காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும்..... என்கிறது ஜப்பானிய மருத்துவ முறை.

நன்றி குமுதம் சிநேகிதி.